காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 29-11-2019 - T.தென்னரசு

காலை வழிபாட்டுச்  செயல்பாடுகள்
29-11-2019
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
இன்றைய திருக்குறள்
குறள்எண்- 415

அதிகாரம் : கேள்வி

இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே 
 ஒழுக்க முடையார்வாய்ச் சொல்.

மு.வ உரை:

கல்லாதவன் ஒழுக்கமுடைய சான்றோரின் வாய்ச் சொற்கள், வழுக்கல் உடைய சேற்று நிலத்தில் ஊன்றுகோல் போல் வாழ்க்கையில் உதவும்.

கருணாநிதி  உரை:

வழுக்கு நிலத்தில் நடப்பதற்கு ஊன்றுகோல் உதவுவது போல் ஒழுக்கம் உடையவர்களின் அறிவுரையானது உதவும்.

சாலமன் பாப்பையா உரை:

கற்று, ஒழுக்கம் மிக்கவரின் வாயிலிருந்து பிறந்த சொற்கள் வழுக்கும் தரையில் ஊன்றுகோல் உதவுவது போல் துன்ப நேரத்தில் உதவும்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
பொன்மொழி

வாழ்க்கைத்தரம் என்பது அவரவர் குணத்தைப் பொறுத்தே அமைகிறது. நேர்மை, மனத்தூய்மை, பக்தி ஆகிய நற்குணங்களின் மூலம் வாழ்வு மேம்படும்.

✡✡✡✡✡✡✡✡
பழமொழி மற்றும் விளக்கம் 
A friend in need is a friend in deed
ஆபத்தில் உதவும் நண்பனே உண்மையான நண்பன்
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱

Important  Words

1.Axle - அச்சு
2. Balcony - முன் முகப்பு
3. Bamboo - மூங்கில்/பிரம்பு
4. Bang - பேரொலி
✍✍✍✍✍✍✍
பொதுஅறிவு

1. தர்ம விஜயம் என்ற அறவழியைக் கடைபிடித்தவர் யார்?

 அசோகர்

2. வெண்கடல் எங்குள்ளது ?

 வட ரஷ்யா

📫📫📫📫📫📫📫📫
விடுகதை

1. ஒற்றைக் கிண்ணத்திற்குள் இரட்டைத் தைலங்கள்- அவை எவை?

 முட்டை

2. ஒட்டியவன் ஒருத்தன், பிரித்தவன் இன்னொருவன் அது என்ன ?

 கடிதம் 

✡✡✡✡✡✡✡✡
Daily English
1. The bun is on the pan
2. The doll is in the box.
3. The clock is on the wall.

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
அறிவோம்! கூறுவோம் !விவசாயம்!

பாலக் கீரை

🍂 பாலக்கீரை ஒரு கீரை வகையைச் சேர்ந்த மூலிகைச்செடியாகும்.

🍂 இக்கீரையின் தாயகம் ஐரோப்பாவாகும்.

🍂 பின் வட ஆப்ரிக்கா, ஆசியா, இந்தியா போன்ற நாடுகளுக்குப் பரவியது. தென் ஐரோப்பாவில் இதன் வேரிலிருந்து சர்க்கரை எடுக்கிறார்கள்.

🍂ஸ்பெயின் நாட்டில் பாலக்கீரையை அதிகம் சாகுபடி செய்கிறார்கள்.இது வீட்டில் வளர்க்க ஏற்ற கீரையாகும்.

👴👴👴👴👴👴👴👴👴👴👴👴
இன்றையகதை

ஒரு தவளையும் ஒரு சுண்டெலியும்

ஒரு காட்டில் ஒரு தவளையும், ஒரு சுண்டெலியும் நண்பர்களாக வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் தவளை வாழ்ந்து வந்த குளத்தில் நீர் வற்றிவிடவே தவளை மிகவும் வருந்தியது. அதனால் எலி அங்குமிங்கும் தேடி அலைந்து ஒரு குளத்தைக் கண்டுபிடித்தது. இருவரும் சேர்ந்து குளத்தினருகில் சென்றவுடன் குளம் யாருக்குச் சொந்தம் என்பதில் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டத்தால் எலி தன் இனத்தவரை ஆதரவுக்கு அழைத்தது. 

தவளையும் அதேபோல் தன் இனத்தவர்களை உதவிக்கு அழைத்தது. சண்டையில் நிறைய எலிகளும் தவளைகளும் இறந்து போயிற்று. இதனை வானத்தில் வட்டமிட்டுக் கொண்டிருந்த பருந்துகள் பார்த்தன. பருந்துகள் கீழே வந்து சண்டையிட்டுக் கொண்டிருந்த எலிகள், தவளைகள் மீது பாய்ந்து அவைகளைத் தமக்கு இரையாக்கிக் கொண்டன. 

நீதி :
எளியவன் தனித்து இருந்தால் அவனை வலியவன் வெல்வது எளிது

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
தொகுப்பு:
T.தென்னரசு...நி.பள்ளிகாட்டூர்திருவள்ளூர் மாவட்டம்.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

செய்திச்சுருக்கம்.

🔮தமிழக அரசு 5 மற்றும் 8 ஆகிய வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது.

🔮3 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்தடைந்தார் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே.

🔮டெல்லியில் மகளிர் பாதுகாப்பிற்காக பிங்க் நிற இரு சக்கர வாகனங்கள் கொண்ட சிறப்பு ரோந்து குழு அமைக்கப்பட்டு உள்ளது.

🔮சீனா மற்றும் பாகிஸ்தான் கடற்படை அடுத்த ஆண்டு அரபிக்கடலில் கூட்டு கடற்பயிற்சி மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளது.

🔮உள்நாட்டில் தயாரான பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை பரிசோதனை வெற்றியடைந்து உள்ளது.

🔮 ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் அபிஷேக் வர்மா-ஜோதி சுரேகா ஜோடி 158-151 என்ற புள்ளி கணக்கில் சீன தைபேயின் யி ஹசுன் சென்-சிக் லுக் சென் இணையை தோற்கடித்து தங்கப்பதக்கத்தை தனதாக்கியது. 

🔮நீர்வள மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.649 கோடி ஒதுக்கி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு.

HEADLINES
🔮Two days before Royal visit, Sweden sends tough statement on Kashmir.

🔮Sri Lankan President Gotabaya Rajapaksa arrives on two-day India visit.

🔮A 1500-square-ft organic terrace garden in the heart of Chennai.

🔮Asian Archery Championship Recurve event | Deepika strikes gold, Ankita wins silver.


காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 28-11-2019 - T.தென்னரசு

காலை வழிபாட்டுச்  செயல்பாடுகள்
28-11-2019
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
இன்றைய திருக்குறள்
குறள்எண்- 991
அதிகாரம் : பண்புடைமை

எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும் 
 பண்புடைமை என்னும் வழக்கு.

மு.வ உரை:

பண்பு உடையவராக வாழும் நல்வழியை, யாரிடத்திலும் எளிய செவ்வியுடன் இருப்பதால் அடைவது எளிது என்று கூறுவர்.

கருணாநிதி  உரை:

யாராயிருந்தாலும் அவர்களிடத்தில் எளிமையாகப் பழகினால், அதுவே பண்புடைமை என்கிற சிறந்த ஒழுக்கத்தைப் பெறுவதற்கு எளிதான வழியாக அமையும்.

சாலமன் பாப்பையா உரை:


எவரும் தன்னை எளிதாகக் கண்டு பேசும் நிலையில் வாழ்ந்தால், பண்புடைமை என்னும் நல்வழியை அடைவது எளிது என்று நூலோர் கூறுவர்.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
பொன்மொழி


நாம் ஒவ்வொருவரும் துன்பத்தில் உள்ள ஒருவருக்காவது உதவி செய்து அவரது வாழ்வை முன்னேறச் செய்ய வேண்டும். அனைத்து மக்களும் இதனைக் கடைபிடிக்க வேண்டும்.
அப்துல் கலாம்
✡✡✡✡✡✡✡✡
பழமொழி 


A fog cannot be dispelled with a fan

சூரியனை கையால் மறைக்க முடியுமா?
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱

Important  Words

1. Author - நூலாசிரியர்
2. Autonomy - சுய அதிகாரம்
3. Aviary - பறவைக் கூண்டு/பண்ணை
4. Award - பரிசு/விருது

✍✍✍✍✍✍✍
பொதுஅறிவு

1. பாகிஸ்தான் நாட்டின் அரசு மொழி எது ?

 உருது

2. வருடந்தோறும் கழுதைக் கண்காட்சி நடைபெறும் நகரம் எது ?

 அகமதாபாத் (குஜராத்)

📫📫📫📫📫📫📫📫
விடுகதை

1. ஏரியில் இல்லாத நீர், தாகத்திற்கு உதவாத நீர், தண்ணீர் அல்ல - அது என்ன ?

 கண்ணீர்

2. தலைக்குள் கண் வைத்திருப்பவன் இவன் மட்டும் தான். அவன் யார் ?

 நுங்கு 

✡✡✡✡✡✡✡✡
Daily English
1. These are Brinjals
2. Those are Cars
3. We shall go around my house

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
அறிவோம்! கூறுவோம் !விவசாயம்!

காசினி கீரை

🍃 குளிர்ச்சியான மலைப்பிரதேசங்களில் அதிகளவில் பயிரிடப்படும் பயிர் காசினிக்கீரையாகும். 

🍃 உலகளவில் இந்தியா காசினிக்கீரை உற்பத்தி செய்யும் நாடுகளில் முக்கியமானது.


🍃 காசினி பூக்கள் உற்பத்தியாவதற்கு குளிர்ச்சியான தட்ப வெப்பநிலை அவசியம்.

🍃இக்கீரை கொடைக்கானல், ஏற்காடு, சேர்வராயன் உள்ளிட்ட மலைப்பகுதிகளில் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது.

👴👴👴👴👴👴👴👴👴👴👴👴
இன்றையகதை

உள்ளதும் போச்சு

ஒரு முயல் காட்டில் உள்ள ஒரு மரத்தடியில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தது. அப்போது அங்கே ஒரு சிங்கம் மிகுந்த பசியுடன் வந்தது. அந்த சிங்கம் தூங்கிக் கொண்டிருந்த முயலைக் கொன்று பசியைத் தீர்த்துக் கொள்ள எண்ணியது. அதே நேரத்தில் அந்த வழியாக ஒரு மான் செல்வதைச் சிங்கம் பார்த்துவிட்டு முயலைவிட மான் பெரியது. அதனால் மானை சாப்பிட ஆசைப்பட்டது. அந்தச் சிங்கமானது மானைத் துரத்திப்பிடிக்க ஓடியது. ஓடிய சத்தத்தைக் கேட்டு தூங்கிய முயல் விழித்துக் கொண்டது. தனக்கு உள்ள ஆபத்தைப் புரிந்து கொண்டு ஓடி ஒளிந்து கொண்டது. 

சிங்கமானது அந்தக் கலைமானை வெகுதூரம் விரட்டிக்கொண்டு போயும் அதனைப் பிடிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி வந்தது. சரி முயலையாவது கொன்று தின்னலாம் என்று முயல் தூங்கிய இடத்திற்கு வந்துப் பார்த்தால் அங்கு முயலைக் காணவில்லை. முயலைக் காணாத சிங்கம் ஏமாற்றத்துடன் எனக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும். கைக்கு கிடைத்ததை விட்டு விட்டு பேராசையால் உள்ளதையும் இழந்துவிட்டேனே என்று எண்ணித் தன்னையே நொந்து கொண்டது. 

நீதி :

பேராசைப் பட்டால் கிடைப்பதும் கிடைக்காமல் போகும். 

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
தொகுப்பு:
T.தென்னரசு...நி.பள்ளிகாட்டூர்திருவள்ளூர் மாவட்டம்.
🌿🌿🌿🌿🌿🌿🌿

செய்திச்சுருக்கம்.

🔮அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் கேட் தேர்வை எழுத 8.6 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக டெல்லி தொழில்நுட்பக் கழகம் தெரிவித்துள்ளது.


🔮தமிழகத்தில் மேலும் 3 மருத்துவக்கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல்

🔮ஆசிய வில்வித்தை போட்டியில் ஒரேநாளில் இந்தியாவுக்கு 3 பதக்கம் கிடைத்துள்ளது.

🔮அடுத்த மார்ச்சுக்குள் 13 செயற்கைக் கோள்கள் ஏவ திட்டம்... சந்திராயன் -3 திட்டம் நிச்சயம் உண்டு : இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி.

🔮தாத்ரா-நாகர் ஹவேலி மற்றும் டாமன்-டையூ ஆகிய யூனியன் பிரதேசங்களை இணைக்கும் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்.

🔮தமிழக அரசின் சார்பில் பள்ளி துவங்குவதற்கு முன்பு மாணவர்களுக்கு 15 நிமிடங்கள் உடற்பயிற்சி வழங்க வேண்டும்: அமைச்சர் செங்கோட்டையன்.


🔮தற்போதுள்ள 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான இரண்டரை மணி நேர, தேர்வு நேரத்தை 3 மணி நேரமாக அதிகரிக்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

🔮ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 14 செயற்கைக் கோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-47 ராக்கெட்.

HEADLINES

🔮Growth may have slowed but there is no recession, says Nirmala Sitharaman.

🔮Cartosat-3 and 13 other nano satellites put into orbit by PSLV C-47.

🔮Australian PM to return three National Gallery idols stolen from India.

🔮FOOTBALL: Dybala's stunning free kick gives Juventus win over Atletico. 


🔮21 Pakistani migrants granted Indian citizenship by Rajasthan government.



காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 27-11-2019 - T. தென்னரசு

காலை வழிபாட்டுச்  செயல்பாடுகள்
27-11-2019
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
இன்றைய திருக்குறள்
குறள்எண் - 281

அதிகாரம் : கள்ளாமை

எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும் 
 கள்ளாமை காக்கதன் நெஞ்சு.

மு.வ உரை:

பிறரால் இகழப்படால் வாழ விரும்புகிறவன், எத்தன்மையானப் பொருளையும் பிறரிடமிருந்து வஞ்சித்துக்கொள்ள எண்ணாதபடி தன் நெஞ்சைக் காக்க வேண்டும்.

கருணாநிதி  உரை:

எந்தப் பொருளையும் களவாடும் நினைவு தன் நெஞ்சை அணுகாமல் பார்த்துக் (காத்துக்) கொள்பவனே இகழ்ச்சிக்கு ஆட்படாமல் வாழ முடியும்.

சாலமன் பாப்பையா உரை:

அடுத்தவர் நம்மை இகழக்கூடாது என்று எண்ணுபவன், அடுத்தவர்க்குரிய எந்தப் பொருளையும் மனத்தால்கூடத் திருட நினைக்கக்கூடாது.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
பொன்மொழி

நம்பிக்கை இருக்குமிடத்தில் வெற்றி உண்டாகும். அந்த நம்பிக்கையின் அடிப்படை இலக்கணம் விடாமுயற்சி ஒன்றே.
 - பாரதியார்

✡✡✡✡✡✡✡✡
பழமொழி  
A bad work man blames his tools.
ஆடத்தெரியாதவள் தெரு கோணல் என்றாளாம்
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
Daily English
1. My name is Babu
2. This is a Mango.
3. That is a Lorry
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱

Important  Words

1. Astronomer - வானியல் அறிஞர்
2. Armour - போர்க்கவசம்
3. Aroma - நறுமணம்
4. Arch - வளைவு

✍✍✍✍✍✍✍
பொதுஅறிவு

1. நண்டுக்கு எத்தனை கால்கள் ?

  10 கால்கள்

2. மிக வேகமாக நீந்தக்கூடிய மீன் எது ?

 சுறா

📫📫📫📫📫📫📫📫
விடுகதை

1. எட்டுக்கால் ஊன்றி இருகால் படமெடுக்க வட்டக் குடை பிடித்து வருகிறாராம் வன்னியப்பு ?

 நண்டு

2. மரத்திற்கு மேலே பழம். பழத்திற்கு மேலே மரம். அது என்ன ?

 அன்னாசி

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
அறிவோம்! கூறுவோம் !விவசாயம்!

வெந்தயக்கீரை

🍂 வெந்தயக்கீரை வெந்தயத்தின் மூலம் பயிரிடப்படுகிறது. 

🍂 இது மூன்று மாதங்களில் பூத்துக், காய்த்துப் பலன் தந்துவிடும்.

🍂 கீரையாகப் பயன்படுத்துவதற்குப் பூ பூக்கும் முன்னரே வெந்தயச் செடியைப் பிடுங்கிவிட வேண்டும்.

🍂சிறு சிறு இலைகளாகவும், சிறிய தண்டுகளுடன் இருக்கும் வெந்தயக் கீரை, லேசான கசப்புத் சுவை கொண்டது.

🍂வெந்தயக்கீரை ஒருமுறை மட்டுமே அறூவடை செய்யக்கூடியது

👴👴👴👴👴👴👴👴👴👴👴👴
இன்றையகதை

உயிரைக் காத்த உண்மை

நரி, ஓநாய், முயல் ஆகிய மூன்றும் சேர்ந்து ஒரு விவசாயின் பயிர்களையும், விளை பொருட்களையும் நாசம் செய்து வந்தன. இதனால் மிகவும் பாதிக்கப்பட்ட விவசாயி மூன்றையும் ஒழித்துக் கட்ட முடிவு செய்தான். ஒரு நாள் அந்த விவசாயி அவைகளைப் பிடிக்கப் பந்தயங்களை வைத்தான். ஒரு நாள் நரி, ஓநாய், முயல் மூன்றும் விவசாயி வைத்த பந்தயங்களில் மாட்டிக் கொண்டன. 

அவற்றைப் பிடித்த விவசாயி முதலில் முயலிடம் என் தோட்டத்திற்கு ஏன் வந்தாய்? என்று கேட்டான். அதற்கு முயல் முள்ளங்கி இலைகளைச் சாப்பிட வந்தேன். பசியினால் தான் இந்தத் தவறைச் செய்து விட்டேன். இனி ஒருபோதும் இங்கே வரமாட்டேன். என்னை மன்னித்துவிடு என்று உண்மையைக் கூறியது. அடுத்தது நரியிடம் கேட்டான். அதற்கு நரி முயல் போன்ற பிராணிகள் வந்து உனது தோட்டத்தை அழித்துவிடக்கூடாது என்று எண்ணித் தான் வந்ததாகக் கூறியது. 

அதற்கு அடுத்தபடியாக ஓநாயிடம் கேட்டான். அதற்கு அந்த ஓநாய் நீ மறைத்து வைத்துள்ள, எங்களுக்கு உணவாக வேண்டிய ஆட்டுக்குட்டிகளை உண்ண வந்தேன் என்று ஆணவத்துடன் கூறியது. மூன்றையும் விசாரித்த விவசாயி தன் தவறை ஒப்புக்கொண்ட முயலை மட்டும் விடுவித்து நரியையும், ஓநாயையும் கொன்றான். 

நீதி :
உண்மை நிச்சயம் வெல்லும்
 🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
தொகுப்பு:
T.தென்னரசு...நி.பள்ளிகாட்டூர்திருவள்ளூர் மாவட்டம்.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

செய்திச்சுருக்கம்.

🔮தமிழக அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில் அரசுப் பள்ளிகளில் SPOKEN ENGLISH பயிற்சிக்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

🔮அல்பேனியாவில் ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்திற்கு 14 பேர் பலியாகி உள்ளனர். 600 பேர் காயமடைந்துள்ளனர்.

🔮ஆசிய சாம்பியன்ஷிப் ஆடவர் வில்வித்தை போட்டியில் இந்தியாவின் அடானு தாஸ் வெண்கலம் வென்றார்.

🔮உயர்க்கல்வி பயில்வோர் எண்ணிக்கை இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகம்: விழுப்புரத்தில் முதல்வர் உரை.

🔮சையது முஷ்டாக் அலி டிராபி டி20 தொடர்: பஞ்சாப் அணியை போராடி வென்றது தமிழகம்

🔮பொங்கல் பண்டிகை: அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 பரிசுத் தொகை அறிவித்தார் முதல்வர் பழனிசாமி.

HEADLINES

🔮New York Consulate issues travel advisory for Overseas Citizen of India cardholders.

🔮26-hour countdown begins for Cartosat-3 launch.

🔮TN CM announces ₹1,000 for all rice cardholders as Pongal gift.

🔮Chennai Corporation launches battery-operated tricycles to collect garbage.

🔮Football: A dramatic win for Chennaiyin FC over Hyderabad.


🔮PV Sindhu, Tai Tzu Ying fetch joint highest Rs 77 lakh in PBL auction

காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 26-11-2019 - T.தென்னரசு

காலை வழிபாட்டுச்  செயல்பாடுகள்
26-11-2019
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
இன்றைய திருக்குறள்
குறள்எண்- 204

அதிகாரம் : தீ வினையெச்சம்

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின் 
அறஞ்சூழம் சூழ்ந்தவன் கேடு.

மு.வ உரை:

பிறனுக்கு கேட்டைத் தரும் தீய செயல்களை ஒருவன் மறந்தும் கூட எண்ணக்கூடாது, எண்ணினால் எண்ணியவனுக்கு கேடு விளையுமாறு அறம் எண்ணும்.

கருணாநிதி  உரை:

மறந்தும்கூட மற்றவர்க்குக் கேடு செய்ய நினைக்கக் கூடாது; அப்படி நினைத்தால் அவனுக்குக் கேடு உண்டாக்க அவனை அறம் முற்றுகையிட்டு விடும்.

சாலமன் பாப்பையா உரை:

மறந்தும் பிறர்க்குத் தீமை செய்ய எண்ணாதே; எண்ணினால் எண்ணியவனுக்கு அறக்கடவுளே தீமையைத் தர எண்ணும்.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
பொன்மொழி

பிரபஞ்சம் என்னும் மகத்தான் புத்தகம் நம் முன்னே விரிந்து கிடக்கிறது. அதை படித்து அறிவை விசாலப்படுத்துங்கள்.
 - சுவாமி விவேகானந்தர்.
✡✡✡✡✡✡✡✡
பழமொழி மற்றும் விளக்கம் 
அசைந்து தின்கிறது யானை, அசையாமல் தின்கிறது வீடு.

விளக்கம்

சைவ மிருகங்களில் பெரிதான யானைக்கு உணவளித்து தாக்குப்பிடிப்பது கடினம். அது அசைந்து அசைந்து சாப்பிட்டுக்கொண்டே இருக்கும். அதனால் உணவு சீக்கிரமாகவே தீர்ந்துவிடும்.
ஆனால் வீட்டில் உள்ளவர்கள் வேலை செய்யாது (அசையாது) சம்பாதிக்காமல் சாப்பிட்டுக்கொண்டே இருந்தால் எவ்வளவுதான் சொத்து இருந்தாலும் மிக விரைவில் சொத்துகள் தீர்ந்துவிடும்.

எனவே தேவைக்கு ஏற்ப உழைத்து சம்பாதித்து சாப்பிட வேண்டும்
..
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱

Important  Words

1. Affection -  அன்பு, பாசம்
2. Agent - முகவர்
3. Alias - புனைப்பெயர்
4. Aliment - உணவு

✍✍✍✍✍✍✍
பொதுஅறிவு

1.வெஸ்ட் இண்டீஸ் தீவுகளில் மிகப்பெரிய தீவு எது ?

 ஜமைக்கா

2. சட்லெஜ் நதி எந்த ஏரியில் இருந்து உருவாகிறது ?

 மானசரோவர்

📫📫📫📫📫📫📫📫
விடுகதை

1. தண்ணீர் இல்லாமல் வளரும் , தரை இல்லாமல் படரும். அது என்ன ?

 உரோமம்

2. நன்றிக்கு வால், கோபத்துக்கு வாய், அது என்ன ?

 நாய்

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
அறிவோம்! கூறுவோம் !விவசாயம்!

பச்சைப்பயறு

🍊 இதன் தாயகம் இந்தியா மற்றும் ஆசியா என்று கூறப்படுகிறது.

🍊 இதன் தாவரவியல் பெயர் லிக்னோ ரேடியேட்டா என்பதாகும். லெகூமினேசியா என்ற குடும்பத்தைச் சார்ந்தது.

🍊இந்தியாவில் அதிகளவில் பயிரிடப்படுகிறது. தமிழர்களின் சமையலில் பச்சைப்பயறு ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.

👴👴👴👴👴👴👴👴👴👴👴👴
இன்றையகதை

உதவிக்குக் கிடைத்தப் பரிசு

ஒரு நாள் பாம்பு ஒன்று குளிர்காலப் பனியில் விரைத்து சுருண்டு கிடந்தது. அந்த சமயத்தில் அவ்வழியே வந்த குடியானவன் அப்பாம்பிற்கு உதவ நினைத்து அப்பாம்பினை எடுத்து தன் மார்போடு அணைத்துக் கொண்டான். குடியானவனுடைய உடல் சூடு பட்டதும், பாம்பு மெல்ல மெல்ல உணர்வு பெற்றது. அதற்கு நன்றாக உணர்வு வந்ததும், அது தன்னைக் காப்பாற்றிய குடியானவன் மார்பைப் பலமாகக் கடித்தது. பாம்பின் நஞ்சு ஏறி உயிர் போகும் நிலையில் இருந்த குடியானவன் தன் செய்கைக்காக வருந்தினான். குடியானவன் அப்பாம்பைப் பார்த்து உன் குணம் தெரிந்தும் நான் உனக்கு உதவி செய்ததற்கு எனக்கு மிகச்சரியான தண்டனை கிடைத்திருக்கிறது என்றான். 

நீதி :
கேட்காமல் செய்யும் உதவி ஒரு சமயம் உனக்கே ஆபத்தை விளைவிக்கக்கூடும். 

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
தொகுப்பு:
T.தென்னரசு...நி.பள்ளிகாட்டூர்திருவள்ளூர் மாவட்டம்.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

செய்திச்சுருக்கம்.

🔮பொறியியல் படிப்பில் கலந்தாய்வு வழியாக சேரும் மாணவர்களுக்கு மட்டும் உதவித்தொகை வழங்கப்படும் என தமிழக உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.

🔮முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வாட்லிங் இரட்டை சதத்தால் நியூசிலாந்து அணி 615 ரன்கள் குவித்தது. தோல்வியை தவிர்க்க இங்கிலாந்து அணி போராடி வருகிறது

🔮குரூப் 4 பணியிடங்கள் எண்ணிக்கை 6491-ல் இருந்து 9398 ஆக அதிகரிப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு.

🔮நெல்லை உட்பட 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; 28, 29ல் சென்னையில் கனமழை!


🔮நேரடியாக பிளஸ் 2 தேர்வு: தமிழக அரசின் கல்வித்துறை ஒப்புதல்.

🔮தஞ்சையில் மீண்டும் விமான நிலையம்: 2020 முதல் சென்னை, பெங்களூருக்கு இயக்க திட்டம்

HEADLINES

🔮BSNL is looking at savings of about Rs 7,000 crore in wage bill, if 70,000-80,000 personnel opt for the scheme.

🔮Onion prices in Chennai touch Rs 120 per kg for the first time in almost a decade.

🔮Kidambi Srikanth pulls out of PBL to focus on international events.

🔮TN will continue to have full control of Mullaiperiyar dam: Gajendra Shekhawat.

🔮Indian Army to deploy Spike anti-tank missiles on LoC

காலைவழிபாடு&வகுப்பறைச் செயல்பாடுகள் - 16-03-2020 - T. தென்னரசு

காலைவழிபாடு&வகுப்பறைச்   செயல்பாடுகள் 16-03-2020 🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸 இன்றையதிருக்குறள் குறள்எண் - 476 அதிகாரம் : வலியறித...