காலைவழிபாட்டுச் செயல்பாடுகள் - 01-11-2019 - T.தென்னரசு

காலை வழிபாட்டுச்  செயல்பாடுகள்
01-11-2019
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
இன்றையதிருக்குறள்

முயற்சியே வெற்றியைத் தேடி தரும்

குறள் :619

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும். 

விளக்கம் :

கடவுளே என்று கூவி அழைப்பதால் நடக்காத காரியம் ஒருவர் முயற்சியுடன் உழைக்கும் போது அந்த உழைப்புக் கேற்ற வெற்றியைத் தரும். 

குறள் விளக்க கதை :

ஒரு ஊரில் சலவைத் தொழிலாளி ஒருவர் இருந்தார். அவரிடம் வயதான கழுதை ஒன்று இருந்தது. அதற்கு வயதாகிப் போனதால் பொதி சுமக்கச் சிரமப்பட்டது. நடக்கவும் சிரமப்பட்டது. ஒருநாள் தொழிலாளி தன் கழுதையுடன் சென்று கொண்டிருந்தபோது கழுதை வழியில் இருந்த பாழடைந்த கிணற்றுக்குள் விழுந்து விட்டது. 

எப்படியாவது அந்தக் கழுதையைத் தொலைத்து விட நினைத்திருந்த தொழிலாளி இதுதான் சமயமென்று நினைத்தார். கழுதையை மேலே தூக்கிவிடாமல் அப்படியே கிணற்றில் புதைத்து விடுவோம் என அருகில் இருந்தவர்களைக் கூப்பிட்டார். 

கழுதை அப்படியே புதைந்து போகட்டும் என்று எல்லோருமாகச் சேர்ந்து மண்வெட்டி கொண்டு வந்து அருகிலிருந்த மண்ணை வெட்டிக் கிணற்றுக்குள் தள்ளினர். ஆரம்பத்தில் தன் மீது விழும் மண்ணைக் கண்டு திகைத்த கழுதை பின்பு சுதாரித்துக் கொண்டது. 

தனக்கு நேரும் துன்பத்தை எண்ணி வருந்திக் கொண்டிருந்தால் பயனில்லை. ஏதாவது செய்து தப்பிக்க வேண்டும் என நினைத்தது. தன் மீது விழும் மண்ணை உடம்பைச் சிலிர்த்து உதறியபடியே கொஞ்சம் கொஞ்சமாக அடி எடுத்து வைத்து வெளியே வர முயற்சித்தது. 

மேலே இருந்தவர்களும் மண்ணை வெட்டிப் போட்டுக் கொண்டேயிருந்தனர். தப்பிக்க வேண்டுமென்ற குறிக்கோளே பிரதானமாக இருந்ததால் கழுதையும் வேகமாக மண்ணை உதறி விட்டபடி மேலே ஏறி வந்துவிட்டது. 

தொழிலாளியும் கழுதையின் விடாமுயற்சியில் வியந்து மனமிறங்கி தன்னுடன் அழைத்துச் செல்ல முடிவு செய்தான். மனிதர்களாகிய நமக்கும் பல விதங்களில் சோதனைகளும் துன்பங்களும் வந்து சேரலாம். அதையே நினைத்து உழன்று கொண்டிராமல் அதை எல்லாம் உதறித் தள்ளி விட்டு மீண்டு வர முயற்சி செய்வதே புத்திசாலித்தனம். 

நீதி :
தம்மை நோக்கி அளவுக் கடந்த பிரச்சனைகள் வந்தாலும் அதனை கடந்து முன்வர வேண்டும். 

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
பொன்மொழி

குழந்தைக்கு முதற்பாடம் பணிவு

✡✡✡✡✡✡✡✡
பழமொழி மற்றும் விளக்கம் 
மண்ணைத் திண்ணாலும் மறையத் திங்கணும் 
விளக்கம் :
பிள்ளைகள் வீட்டில் செய்த திண்பண்டங்களை வீட்டிற்கு வெளியில் அல்லது தெருவில் சாப்பிட்டுக் கொண்டிருந்தால் பெரியவர்கள் அவர்களை அதட்டி வீட்டிற்கு உள்ளே சென்று சாப்பிடுமாறு கூறுவார்கள். ஏனென்றால் யாராவது பார்த்தால் என்ன ஏதோ சாப்பிடுகிறானே என்று நினைத்துவிட்டாலே அந்த எண்ணம் பிள்ளைகளுக்கு உடல்நல பாதிப்பை ஏற்படுத்தலாம். அதினால்தான் மண்ணைத் திண்ணாலும் மறையத் திங்கணும் என்று கூறுவார்கள்.

🔱🔱🔱🔱🔱🔱🔱🔱

Important  Words

1.Lungs - நுரையீரல்
2. Liver - கல்லீரல்
3.Skin - தோல்
4. Shoulder - தோள்பட்டை

✍✍✍✍✍✍✍
பொதுஅறிவு

1. இந்தியாவின் பிஸ்மார்க் யார்?

 சர்தார் வல்லபாய் படேல்

2. பாரத ரத்னா விருது பெற்ற முதல் நபர் யார் ?

 ராஜாஜி

📫📫📫📫📫📫📫📫
விடுகதை

1. காட்டுக்குள் இருக்கும் குடை, வீட்டுக்குள் இருக்காது. அது என்ன?
காளான்
2. காட்டிலே சிரித்தபடி நிற்பாள், பெண்ணும் அல்ல; கை பட்ட உடன் துவண்டு விடுவாள், பூவும் அல்ல. அது என்ன?
தொட்டாற்சிணுங்கி
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
அறிவோம்! கூறுவோம் !விவசாயம்!

காளான்

🍄 காளான்கள் மண்ணின் மீது வளரும் ஒரு பூஞ்சைத் தாவர உயிரினம் ஆகும்.

🍄 பல நாட்டவரால் விரும்பி உண்ணப்படும் உணவான காளான், பல தரப்பட்ட சூழல்களிலும் வளரக் கூடியது.

🍄 மழைக்காலங்களில் இயற்கையாக வளரும் காளான்களை பிடுங்கி உணவுக்காக பயன்படுத்துகின்றனர். தற்போது குடிசைத் தொழிலாக செயற்கையாக உற்பத்தி செய்கின்றனர்.

🍄முன்பு இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் காளான்கள் மக்களின் உணவாக இருந்தது. இன்று பல  நாடுகளில் காளான் உற்பத்தி செய்து உணவாக பயன்படுத்தி வருகின்றனர்.

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
தொகுப்பு:
T.தென்னரசு...நி.பள்ளிகாட்டூர்திருவள்ளூர் மாவட்டம்.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

செய்திச்சுருக்கம்.

🔮நிலவில் 4 விஞ்ஞானிகளை 2 வாரத்திற்கு தங்க வைத்து ஆராய்ச்சி நடத்த நாசா திட்டம்.

🔮சர்வதேச அறிவியல் திட்டங்களில் இந்தியாவின் பங்களிப்பைக் காட்டும் விதமாக மாபெரும் அறிவியல் கண்காட்சி கொல்கத்தாவில் நடைபெற உள்ளது.

🔮தீவிர புயலாக மாறியது ‘மஹா’புயல் - இந்திய வானிலை ஆய்வு மையம்.

🔮மத்திய அரசின் கோரிக்கையின் ஏற்று மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கூடுதலாக 20 ஏக்கர் நிலம் ஒதுக்கியது தமிழக அரசு.


🔮2வது டி20 போட்டியிலும் இலங்கை ஏமாற்றம்: தொடரை வென்றது ஆஸ்திரேலியா.

HEADLINES

🔮Russia exploiting countries’ security requirements with S-400: U.S. official.

🔮Pakistan violated its obligations under Vienna Convention in Kulbhushan Jadhav’s case: ICJ Judge tells UNGA.

🔮Flood alert sounded in Nilgiris, water released from Avalanche Dam.

🔮Surplus water from Parthipattu lake flood houses in Avadi, Ambattur and Ayappakkam.


🔮PM Modi to visit Thailand from November 2-4 for ASEAN-India, East Asia and RCEP summits.

காலைவழிபாட்டுச் செயல்பாடுகள் - 31-10-2019 - T.தென்னரசு

காலைவழிபாட்டுச்  செயல்பாடுகள்
31-10-2019
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
இன்றையதிருக்குறள்

குறள் :969

மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின். 

விளக்கம் :

தன் உடலிலிருந்து ஒரு ரோமம் உதிர்ந்தாலும் உயிர் துறக்கும் கவரிமானைப் போல, தன் பெயருக்கு இழுக்கு நேர்ந்தால் சாண்றோர்கள் தன்னுயிரையே மாய்த்துக் கொள்வார்கள். 

குறள் விளக்க கதை :

மன்னன் ராஜவர்மன் நீதி தவறாத நேர்மையாளன். நீதியையும் நேர்மையையும் தன் உயிருக்கும் மேலாக மதிப்பவன். ஒரு நாள் குணசேகரன் என்னும் அயலூர்க்காரன் மன்னன் ராஜவர்மனிடம், அரசே, நான் என் மனைவியுடன் உங்கள் தலைநகரில் வந்துகொண்டிருந்தேன். தலைநகரத்தை அடைவதற்கு முன் காட்டில் நண்பகல் நேரம் நானும், என் மனைவியும் ஒரு மரத்தடியில் உறங்கிக் கொண்டிருந்தோம். அப்போது அவள் மீது எங்கிருந்தோ வந்த அம்பு தைத்து உயிரிழந்து விட்டாள். எங்களுக்கு எதிரில் சற்று தூரத்தில் வேடன் அமர்ந்திருந்தான். அவன் தான் என் மனைவியைக் கொன்றவன். அவனை நீங்கள் தண்டிக்க வேண்டும் என்றான். 

ஆனால் அந்த வேடனோ, அரசே, நான் குற்றமற்றவன். எந்த காரணமும் இன்றி நான் ஏன் அந்தப் பெண்ணைக் கொல்ல வேண்டும்? நான் அம்பு எய்தவில்லை என கதறினான். கொல்லப்பட்ட பெண்ணின் உடலையும், அவள் மீது தைத்திருந்த அம்பையும் பார்த்த ராஜவர்மனுக்கு ஓர் எண்ணம் தோன்றியது. 

வேடனே, நீ வேறு விலங்குக்கு குறி வைத்து தவறுதலாக இந்தப் பெண் மீது பட்டிருக்கலாம் அல்லவா? எனக் கேட்டான். ஆனால், அப்போது தானும் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்ததாக வேடன் சாதித்தான். வேடனின் வார்த்தைகளை நம்பாத மன்னன், அவனை நாடு கடத்த உத்தரவிட்டான். 

இந்த சம்பவம் நடந்து இரு நாட்களுக்குப் பின், வெளியூர் சென்றிருந்த முதலமைச்சர் ராஜவர்மனைச் சந்தித்தார். அப்போது நடந்த சம்பவத்தைப் பற்றி அவரிடம் விவாதித்தான். அந்தப் பெண்ணின் மீது தைத்த அம்பினைப் பார்த்த முதலமைச்சர், அரசே, இந்த அம்பினை கவனித்தீர்களா துருப்பிடித்திருக்கிறது. வேடர்கள் துருப்பிடித்த அம்பைப் பயன்படுத்த மாட்டார்கள். அந்தப் பெண் உறங்கிய மரத்தின் மீது எப்போதோ இந்த அம்பு சிக்கியிருக்கிறது. அன்று அந்த அம்பு தற்செயலாக அந்தப் பெண் மீது விழுந்திருக்கலாம். வேடன் குற்றமற்றவன் என்றே தோன்றுகிறது என்றார். 

இதைக் கேட்டுப் பதறிய மன்னன், தவறான தீர்ப்பை வழங்கியதால் குற்ற உணர்வில் துடிதுடித்து இறந்தான். 

நீதி :
எப்பொழுதும் நேர்மையாக செயல்பட வேண்டும். 
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
பொன்மொழி

வெற்றி என்பது ஒவ்வொரு முறையும் முதல் இடத்தைப் பெறுவது என்று பொருள் அன்று. வெற்றி பெற்றாய் என்றால் உன் செயல்பாடு சென்ற முறையை விட இம்முறை சிறப்பாக அமைந்துள்ளது என்று பொருள்.

✡✡✡✡✡✡✡✡
பழமொழி மற்றும் விளக்கம் 
தென்ன மரத்துல தேள் கொட்டினா பன மரத்துல நெரி ஏறுதாம் .
விளக்கம் :
ஒருவர் ஒரு தவறு செய்துள்ளார் என்று வைத்துக் கொள்வோம். நாம் அந்த தவறை சுட்டிக் காட்டவில்லையென்றாலும் வேறு ஒருவர் அந்த தவறை செய்திருப்பார். அதைபற்றி நாம் பேசினாலும் இவரைப் பற்றிதான் சொல்கிறோம் என்று சில நேரங்களில் சண்டைக்கு வருவதுண்டு. அதாவது வேறு விதமாக ஒருவர் ஒரு தவறுக்கு தண்டனை அனுபவிக்கிறார் என்றால் வேறொருவர் தான் செய்த வேறொரு தவறை நினைத்து பயப்படுவதை இந்த பழமொழியை உபயோகித்து கூறலாம்.
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱

Important  Words

1. Sister-in-law - மைத்துனி
2. Son-in-law - மருமகன்
3. Family - குடும்பம்
4.Friend - நண்பன்

✍✍✍✍✍✍✍
பொதுஅறிவு
1. சீனாவின்  புனித விலங்கு எது ?

 பன்றி

2. பிரமிடுகளின் பிறப்பிடம் எது?

எகிப்து

📫📫📫📫📫📫📫📫
விடுகதை

1. காட்டில் தொங்கும் பொட்டலம். காவல் நிறைந்த பொட்டலம். அது என்ன?
தேன்கூடு
3. காட்டிலே இருக்கிற கண்ணம்மாள், வீட்டை சுத்தப்படுத்துகிறாள் . அவள் யார்?
துடைப்பம்

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
அறிவோம்! கூறுவோம் !விவசாயம்!

பீன்ஸ் 

🍊 பீன்ஸ் கொடிவகையான காய்கறி வகையாகும். தென் அமெரிக்க நாடான பெருவை பூர்விகமாகக் கொண்டது. பின்னர் ஐரோப்பியர்கள் மூலம் மற்ற நாடுகளுக்குப் பரவியது. 

🍊 இந்தியாவை ஆக்கிரமித்திருந்த ஐரோப்பியர்களால் அறிமுகமான காய்கறிகளின் ஒன்று பீன்ஸ். இன்று சீனா, இந்தோனேஷியா நாடுகளுக்கு அடுத்தபடியாக இந்தியா அதிக அளவில் பீன்ஸ்  உற்பத்தி செய்கிறது.

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
தொகுப்பு:
T.தென்னரசு...நி.பள்ளிகாட்டூர்திருவள்ளூர் மாவட்டம்.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

செய்திச்சுருக்கம்.

🔮சென்னை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக ஏபி சஹியை நியமித்து ஜனாதிபதி உத்தரவு.

🔮அணைகள், ஏரிகள், குளங்களின் நீரின் அளவை 24 மணி நேரமும் கண்காணிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு.

🔮வங்காளதேச அணி பங்கேற்க சம்மதம்: இந்தியாவில் முதல்முறையாக பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி - கொல்கத்தாவில் நடக்கிறது.

🔮திருவள்ளூர்: கிருஷ்ணாபுரம் நீர்த்தேக்கத்தில் அதிகநீர் திறக்க வாய்ப்பு கொசஸ்தலை ஆற்றில் வெள்ள எச்சரிக்கை.

🔮தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை.

🔮 கனமழை எதிரொலி: மத்திய நீர் வள ஆணையம் எச்சரிக்கை.

HEADLINES
Terrorism in Kashmir is not just India’s problem, say European lawmakers.
🔮No more queues for check-in bag screening at Chennai International Airport.
🔮Cyclone Kyarr: Kerala to get heavy rain for next two days, 'orange' alert issued for Thiruvananthapuram.
🔮This Rajasthan cop built a school to educate 450 children who used to beg on streets.
🔮TN, Pondy brace for heavy rains as depression likely to escalate into deep depression.


காலைவழிபாட்டுச் செயல்பாடுகள் - 30-10-2019 - T.தென்னரசு

காலைவழிபாட்டுச்  செயல்பாடுகள்
30-10-2019
இன்றையதிருக்குறள்

குறள் : 612

வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை
தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு. 

விளக்கம் :

செயலைத் தொடங்கிக் குறையாக விட்டவரை இவ்வுலகம் கைவிடும். ஆகையால், செயலில் முயற்சி இல்லாது இருத்தலைத் தவிர்க்க வேண்டும். 

குறள் விளக்க கதை:

ஒரு விவசாயிக்கு வயது அதிகமானதால் இறக்கும் தருவாயில் இருந்தார். தம் பிள்ளைகள் பொறுப்பில்லாமல் இருப்பதை பற்றி கவலையாக இருந்தார். ஒரு நாள், அவர் தம் பிள்ளைகளை அருகில் அழைத்தார். தன்னுடைய நிலங்களை அவர்களுக்குப் பிரித்துக் கொடுத்தார். அது மட்டுமல்லாமல், அந்த நிலங்களில் ஓரிடத்தில், ஓரடி ஆழத்தில் புதையல் இருப்பதாகச் சொன்னார். அதைத் தேடி எடுத்துக்கொள்ளும்படிச் சொல்லிவிட்டு இறந்து போனார். 

பிள்ளைகள் மூவரும் தந்தைக்குச் செய்ய வேண்டிய இறுதிக் காரியங்கள் அனைத்தையும் செய்தார்கள். அதன்பின், அவர் குறிப்பிட்டிருந்த புதையலை எடுப்பதற்காக நிலத்தைத் தோண்ட ஆரம்பித்தார்கள். 

முதலில் மூத்த மகனின் நிலம் முழுவதையும் ஒரு அடி ஆழத்துக்கு தோண்டினார்கள். புதையல் எதுவும் கிடைக்கவில்லை. ஒருவேளை, அப்பா இரண்டடி என்று சொல்வதற்கு பதிலாக ஓரடி என்று சொல்லிவிட்டாரோ என்ற சந்தேகத்தில் பிள்ளைகள் மூவரும் சேர்ந்து, மூத்தவனின் நிலத்தை இன்னும் ஓரடி ஆழமாகத் தோண்டினார்கள். அப்போதும் அவர்களுக்குப் புதையல் கிடைக்கவில்லை. 

எப்படியும் புதையலைக் கண்டுபிடித்து விட வேண்டும் என்ற வெறியில், இரண்டாவது மகனின் நிலத்தையும் இரண்டடி வரை தோண்டினார்கள். ஏமாற்றம்தான் மிஞ்சியது. இவ்வளவு தூரம் வந்தபின் எப்படி விட முடியும் என்று கடைசி மகனின் நிலத்தையும் இரண்டடி தோண்டினார்கள். மறுபடியும் ஏமாற்றமே. 

அப்பா மேல் வருத்தம் வந்தாலும், அவர்கள் சரி தோண்டியது வீணாக வேண்டாம் என்று எண்ணி, அந்த நிலங்களில் விதை விதைத்தார்கள். நீர் பாய்ச்சினார்கள். உரம் போட்டார்கள். உழைப்பு வீண் போகுமா? ஆண்டு முடிவில் அவர்கள் நிலத்தில் அமோக விளைச்சல். அறுவடை செய்து விற்றதில் அவர்களுக்குக் கொள்ளை லாபம். 

இப்படி உழைப்பால் வரும் பயனைத்தான் அப்பா புதையல் என்று குறிப்பிட்டார் என்று பிள்ளைகள் மூவரும் புரிந்து கொண்டார்கள். 

நீதி :

எந்த செயல் எடுத்தாலும் அதை பாதியில் நிறுத்து விடாமல் விடாமுயற்சியுடன் செய்தால் கண்டிபாக பலன் கிடைக்கும். 

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
பொன்மொழி

கனவுகள் எல்லை எனில், புரட்சிகரமான சிந்தைனைகள் இல்லை. சிந்தனைகள் இல்லையேல் செயல்பாடுகள் இல்லை. தொழில் நுட்பம் மற்றும் மரபுவழி செயல்களைக் கொண்ட ஒட்டு மொத்த அணுகுமுறையே தேசத்தின் வளர்ச்சியில் வளமான நிறைவைத் தரும்.
 - அப்துல் கலாம்

✡✡✡✡✡✡✡✡
பழமொழி மற்றும் விளக்கம் 
இஞ்சி தின்ற குரங்கு போல 
விளக்கம் :
இஞ்சியைப் போன்ற தோற்றமுள்ள காட்டு மஞ்சள் கிழங்கின் மீது குரங்குக்கு மிகுந்த விருப்பம். இது மாங்காய் இஞ்சியைப் போன்றது. காரமில்லாதது சற்று இனிப்பும் அதில் இருக்கும். அதை ருசி கண்ட குரங்கு அதுபோலவே தோன்றும் சாதாரண இஞ்சியைக் கண்டு ஏமாந்து கடித்துச் சுவைத்து விடும். அப்போது ஏற்படும் அதன் முகபாவத்தையும் கோபத்தையும் குறிப்பது தான் இந்தப் பழமொழி.
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱
Important  Words
1. Father - in - law - மாமனார்
2. Daughter -in-law - மருமகள்
3. Mother-in-law - மாமியார்
4. Foe - எதிரி

✍✍✍✍✍✍✍
பொதுஅறிவு

1. சேக்கிழாருக்கு எங்கு கோயில் உள்ளது ?

 குன்றத்தூர்

2. நவீன வானவியலின் தந்தை யார் ?

நிகோலஸ் கோபர்னிகஸ்

📫📫📫📫📫📫📫📫
விடுகதை

1.பொட்டுப் போல இலை இருக்கும், குச்சி போல காய் காய்க்கும். அது என்ன ?

முருங்கை

2. காகிதத்தைக் கண்டால் கண்ணீர் விடும். முக்காடு போட்டால் மூலையில் அமரும். அது என்ன?

பேனா

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
அறிவோம்! கூறுவோம் !விவசாயம்!

அவரைக்காய்

🍡 இந்தியா போன்ற தெற்காசிய பகுதிகளில், குறிப்பிட்ட காலநிலையில் வளரக்கூடிய கொடி வகை தாவரம் அவரை.

🍡 விவசாயம் பழகிய காலத்திலிருந்தே இந்த காய்களை உண்ணும் பழக்கம் இருந்திருக்கிறது. இலக்கியங்களிலும் அதற்கான சான்றுகள் உண்டு. அவரைக்காயில் ஏராளமான வகைகள் உண்டு.

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
தொகுப்பு:
T.தென்னரசு...நி.பள்ளிகாட்டூர்திருவள்ளூர் மாவட்டம்.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

செய்திச்சுருக்கம்.

🔮சுஜித் குடும்பத்திற்கு அரசு சார்பில் ரூ.10 லட்சமும், அ.தி.மு.க. சார்பில் ரூ.10 லட்சமும் வழங்கப்படும் - முதல் அமைச்சர் பழனிசாமி.

🔮ராஜராஜ சோழனின் 1034வது சதய விழா; தஞ்சையில் நவம்பர் 6ந்தேதி கொண்டாடப்படுகிறது.

🔮இந்தியர்களின் மூளை சிறியது ஆய்வில் தகவல்.
    ஐதராபாத் ஆய்வாளர்கள் ஆராய்ச்சியாளர்கள் முதன்முதலில் இந்தியர்களின் மூளை அட்லஸை உருவாக்கியுள்ளனர்.

🔮3 நாட்களில் 1,100 ஆழ்துளை கிணறுகள் மூடப்பட்டுள்ளன - திருவள்ளூர் ஆட்சியர் மகேஷ்வரி தகவல்.

🔮பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி: முதல் சுற்று ஆட்டத்தில் ஸ்விடோலினா, சிமோனா ஹாலெப் வெற்றி.


🔮இந்தியாவிலேயே முதல் முறையாக விவசாயிகளின் வருமானத்தை பெருக்க சட்டம் இயற்றியது தமிழக அரசு.

HEADLINES

🔮 No move to merge Yanam with Andhra Pradesh, says Kiran Bedi.

🔮Borewell death: TN to convert all dry wells into rainwater harvesting structures.

🔮India’s first ever day-night Test to be against Bangladesh in Kolkata.


🔮Questions grow over NGO’s invitation to European Union parliamentarians.

காலைவழிபாட்டுச் செயல்பாடுகள் - 29-10-2019 - T. தென்னரசு

காலைவழிபாட்டுச்  செயல்பாடுகள்
29-10-2019
இன்றையதிருக்குறள்

குறள் : 877

நோவற்க நொந்தது அறியார்க்கு மேவற்க
மென்மை பகைவர் அகத்து. 

விளக்கம் :

தனது துன்பத்தைப் பற்றி அதனை அறியாமல் இருக்கும் நண்பர்களிடம் சொல்லக்கூடாது. தனது பலவீனத்தைப் பகைவரிடம் வெளிப்படுத்திவிடக் கூடாது. 

குறள் விளக்க கதை :

சிறுவன் ஒருவன் ஜூடோ பயில விரும்பினான். அவனுக்கோ ஒரு விபத்தினால் இடது கை போய்விட்டது. எனினும் இந்தக் குறையைப் பொருட்படுத்தாமல், குரு ஒருவர் அவனுக்குப் பயிற்சி அளிக்க ஒப்புக் கொண்டார். 

தினமும் பயிற்சி அளித்தார் குரு. ஆனால் ஒரே ஒரு குத்து வித்தை தான் சொல்லிக் கொடுத்தார். நான்கைந்து மாதங்கள் சென்றன. அப்போதும் அதே பயிற்சிதான். சிறுவனுக்கோ ஒன்றும் புரியவில்லை. ஆனாலும் தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டான். 

ஒரு நாள் சிறுவன் குருவைக் கேட்டே விட்டான். இந்த ஒரு குத்து போதும் உனக்கு என்று சொல்லிவிட்டார். நாட்கள் கடந்தன. குரு சிறுவனைப் போட்டிக்கு அனுப்பினார். ஒரு கையுடன் வந்த சிறுவனைப் பார்த்து பலரும் அற்பமாய் எண்ணினர். ஆனால் அவர்கள் நினைத்ததுதான் தவறு. வெற்றி சிறுவனுக்கே. தன்னை விட பலசாலிகளை எல்லாம் ஆக்ரோஷமாய் எதிர் கொண்டு வீழ்த்தி விட்டான். சிறுவனுக்கும், அங்கிருந்த எல்லோருக்கும் ஆச்சர்யம். 

எப்படி குருவே என்னால் ஒரு கையை வைத்துக் கொண்டு, ஒரே ஒரு குத்துப் பயிற்சியை மட்டும் கற்று வெற்றி பெற முடிந்தது? என்று கேட்டான். 

குரு சொன்னார், இரண்டே காரணங்கள் தான். ஒன்று, நீ பயிற்சி செய்தது ஜூடோவிலேயே மிகவும் கடினமான குத்து. இரண்டு, இந்தக் குத்தை தடுக்க வேண்டும் என்றால் குத்துபவனின் இடது கையை மடக்க வேண்டும். உன்னிடம் அது இல்லை. குருவுக்கு ஆத்மார்த்தமாக நன்றி சொன்னான் சிறுவன். 

நீதி :

தன்னிடம் உள்ள குறையை மற்றவர்களிடம் வெளிப்படுத்தக் கூடாது. 
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
பொன்மொழி

நாம் எப்படி வரவேண்டும் என்று இன்று நினைக்கிறோமோ, அதன்படியே நாளை உருவாகி விடுவோம் என்ற உறுதியான சிந்தனைக்கு ஏற்ப நம்பிக்கையுடன் சிந்திக்க வேண்டும். 
 - அப்துல் கலாம்
✡✡✡✡✡✡✡✡
பழமொழி மற்றும் விளக்கம்
குருவிக்கு தக்கன ராமேஸ்வரம்.
விளக்கம் :
நம்முடைய தகுதிக்கும் வசதிக்கும் தகுந்ததுதான் கிடைக்கும் என்ற அர்த்தத்தில் இருந்து பழமொழி உபயோகப்படுத்தப்படுகிறது. அதென்ன குருவிக்கு தக்கன ராமேஸ்வரம். குருவிக்கும் ராமேஸ்வரத்துக்கும் என்ன சம்மந்தம். குறி வைக்கத் தப்பாது ராமசரம் என்பதே உண்மையான பழமொழி. ராமனின் அம்பு (ராமசரம்) குறி வைத்துவிட்டால் தப்பாது இலக்கை அடையும் என்பதே இதன் உண்மையான அர்த்தம். நாளடைவில் பேச்சுவழக்கில் குருவிக்கு தக்கன ராமேஸ்வரம் என்று மாறிப்போனது.
 🔱🔱🔱🔱🔱🔱🔱🔱
Important  Words
 1.Heart - இதயம்
 2. Hair - முடி
 3. Kidney - சிறுநீரகம்
 4.Knee- முழங்கால்
✍✍✍✍✍✍✍
பொதுஅறிவு

1.குடும்ப விளக்கு எனும் நூலின் ஆசிரியர் யார்?

பாவேந்தர் பாரதிதாசன்

2. மைனா பறவைகளின் தாயகம் எது ?

 இந்தியா

📫📫📫📫📫📫📫📫
விடுகதை

1. யாரும் ஏற முடியாத மரம்; கிளைகள் இல்லாத மரம். அது என்ன மரம்?
வாழை மரம்
2.. விழுந்தால் படுக்காது; எழுந்தால் நிற்காது. அது என்ன?
தலையாட்டி பொம்மை
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
அறிவோம்! கூறுவோம் !விவசாயம்!

தக்காளி

🍅 தக்காளி செடியினத்தைச் சேர்ந்த தாவரமாகும்.

🍅 தக்காளி சமையலில் பழமாக பயன்படுகிறது.

🍅தக்காளியின் பிறப்பிடம் அமெரிக்க கண்டம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். அந்தக் கண்டத்தில் 16-ம் நூற்றாண்டில் உணவுக்காக தக்காளி பயன்படுத்தப் பட்டிருக்கும் விஷயம் வரலாற்றுப் பதிவுகளில் காணப்படுகிறது.

🍅இந்தியாவில் ஆந்திரா, பீகார், கர்நாடகா,ஒரிசா போன்ற மாநிலங்களில் தக்காளி அதிகமாக பயிரிடப்படுகிறது.
  
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
தொகுப்பு:
T.தென்னரசு...நி.பள்ளிகாட்டூர்திருவள்ளூர் மாவட்டம்.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

செய்திச்சுருக்கம்.

🔮ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் விலகுவதற்கான பிரெக்சிட் உடன்பாட்டை இறுதி செய்ய ஜனவரி 31ம் தேதி வரை அவகாசம்.

🔮ஜம்மு - காஷ்மீரில் பொதுமக்கள் மீது பாக். தாக்குதல் நடத்துவது குறித்து ஐரோப்பிய கூட்டமைப்பு பிரதிநிதிகளுக்கு தோவல் விளக்கம்.

🔮ராமேஸ்வரம் பாம்பன் துறைமுகத்தில் 3ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்.

🔮நாடு முழுவதும் பயனற்ற ஆழ்துளை கிணறுகளை கண்டறிந்து உடனடியாக மூடுவதற்கு மத்திய குழந்தை பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

🔮சென்னையில் தீபாவளியை ஒட்டி கடந்த 2 நாட்களாக காற்று மாசின் அளவு 198 பி.எம். ஆக உள்ளது.

HEADLINES
🔮TN borewell horror: Parallel hole now 50-feet deep, PM says prayers with 'brave Sujith'.

🔮Govt signals shift, allows European Parliament members to visit Kashmir.

🔮J&K: 20 civilians injured in grenade attack at Sopore.

🔮Keezhadi excavations open age-old debate of Aryans vs Dravidians.

காலைவழிபாடு&வகுப்பறைச் செயல்பாடுகள் - 16-03-2020 - T. தென்னரசு

காலைவழிபாடு&வகுப்பறைச்   செயல்பாடுகள் 16-03-2020 🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸 இன்றையதிருக்குறள் குறள்எண் - 476 அதிகாரம் : வலியறித...